search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடகள போட்டி"

    • உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
    • தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த எஸ்.வி தாரகராம மைதானத்தில் மாநில அளவிலான 42-வது தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்று நடந்தது.

    குண்டூர் மாவட்டம், தெனாலியை சேர்ந்த நாராயணமூர்த்தி (வயது 95). இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

    கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தில் நடைபெறும் பொதுநிலை தடகள போட்டி எங்கு நடந்தாலும் அதில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    நேற்று நடந்த தடகள போட்டியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டு வட்டு எறிதல் ஈட்டி எறிதல் குண்டு எறிதல் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு அசத்தி காட்டினார்.

    வருகின்ற 2024-ம் ஆண்டு புனேவில் நடைபெற உள்ள தேசிய மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். சைவ உணவும், உடற்பயிற்சியும் தனது உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என நாராயணமூர்த்தி தெரிவித்தார்.

    இவருக்கு 60 வயதிற்கு மேற்பட்ட 3 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.
    • ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    அவிநாசி:

    மாவட்ட அளவிலான கபடி போட்டி, திருப்பூா் அருகே பொங்கலூா் அரசு உதவி பெறும் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றனா்.மேலும் மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் 19 வயதுக்கு உள்பட்ட பிரிவில் மாணவா்கள் யாகவராஜ், கவின் ஆகியோா் வெற்றி பெற்று மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

    வெற்றிபெற்ற மாணவா்கள், உடற் கல்வி ஆசிரியை கவிதா உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியா் ஆனந்தகுமாரி, ஒன்றியக் குழு உறுப்பினா் காா்த்தி, உதவித் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.

    • மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது
    • ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்

    திருவண்ணாமலை:

    கலெக்டர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், தொழிலாளர் நல மேம்பாட்டுத் துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன் ஆகியோர் விளையாட்டு ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை தொடங்கிவைத்தனர்.

    இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பாலமுருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் 162 பள்ளிகளைச் சேர்ந்த 14 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆயிரத்து 730 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 2 இடங்களை பெறும் மாணவ மாணவிகள் இந்த மாத இறுதியில் மாநில உடற்கல்வி விளையாட்டு பல்கலை க்கழகத்தில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்.

    • சரக அளவிலான தடகள போட்டியில் மத்தூர் குணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    • வெற்றி மாணவர்களை அனைவரும் பாராட்டினர்

    சரக அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் மத்தூர் குணா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்த கொண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத் துள்ளனர்.

    இதில் மாணவர்க ளுக்கான கால் பந்து போட்டியில் U14 மற்றும் U17 இரண்டு அணிகளும், மாணவர்கள் பந்து வீச்சு போட்டியில் U17 மற்றும் U19 இரு அணிகளும் சரக அளவில் முதலிடமும், U19 மாண விகள் இரண்ட்டா மிடமும் பிடித்தனர்.

    மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியில் U14 மற்றும் U17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.

    மாணவிகளுக்கான கோ -கோ போட்டியில் U14 அணிஇரண்டாம் இடம்பிடித்தனர். சரக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வெள்ளி வெண்கலம் என 17 பதக்கங்களை மாணவ மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தாளாளர் குண. வசந்தரசு சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தார்.

    உடன் பள்ளியின் முதல்வர் இரவிந்திரன், உடற்கல்வி ஆசிரியர் செந்த மிழ் மற்றும் இருபால் ஆசிரி யர் பெருமக்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களை வாழ்த்தினர்.

    • சரக அளவிலான தடகள போட்டியில் கடத்தூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
    • கடத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற தடகள போட்டியில் 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டி யில் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையா டினார்கள்.

    அதில் விளையாடி 104 வெற்றி புள்ளிகளுடன் பெண்கள் பிரிவில் கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியும் ஒட்டு மொத்த சாம்பி யன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.

    கடத்தூர் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியின் இந்த வெற்றி தொடர்ந்து 16-வது ஆண்டாக இப்பட் டத்தை பெறுகிறார்கள்.

    போட்டியில் வென்ற வர்களுக்கு பரிசு கோப்பை பேரூராட்சி தலைவர் கேஸ்.மணி, முன்னாள் தலைமை ஆசிரியர் மோகன் வழங்கினர். வெற்றி பெற்ற மாணவி களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரி யர்கள் ராஜேந்திரன் தென்றல், சத்தியராஜ், ஆனந்த் ஆகியோரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். பெற்றோர் கழகத்தினரும். பள்ளி மேலாண்மை குழுவினர் வெகுவாக பாராட்டினார்கள்.

    • கலெக்டர் போட்டிகளை தொடக்கி வைத்தார்
    • முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் தடகள போட்டிகள் திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க தலைவர் கே. சி. வீரமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஜி. செந்தில்குமார் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி போட்டிகளை தொடக்கி வைத்தார். போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்தவர்களுக்கு கோப்பைகள் மெடல்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ேஜாலார்பேட்டை விளையாட்டு அறக்கட்டளை 43 பதக்கங்கள் பெற்று ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் பதக்கத்தை தட்டிச்சென்றது.

    இதற்கு அறக்கட்டளை தலைவர் சுசிகர், செயலாளர் தென்னரசு, பயிற்சியாளர்கள் சபரிகுமார், ஏசுராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வி. சேது ராஜன், நகராட்சி ஆணையர் ஜி. பழனி, திருப்பத்தூர் மாவட்ட தடகள சங்க கவுரவத் தலைவர் எஸ். பி. சீனிவாசன், பொருளாளர் ஏ. பார்த்திபன் செயலாளர் எம். சிவப்பிரகாசம், தேர்வு குழு தலைவர் கே. மதன்குமார், உள்பட பலர் கலந்த கொண்டனர். முடிவில் மாவட்ட தடகள சங்க செயலாளர் எம் .சிவப்பிரகாசம் நன்றி கூறினார்.

    • 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
    • மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

    ஊத்துக்குளி:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை குறுமைய தடகள விளையாட்டுப் போட்டிகள் விஜயமங்கலத்தில் உள்ள பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். இளையோர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பி. கிஷோர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்று முதலிடம் பெற்றார்.

    மேலும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதே போல் இதே பிரிவில் மாணவி ஆர். பிரியதர்ஷினி வலைப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.

    இவர்களை பள்ளியின் தாளாளர் கே.சந்திரகலா, தலைவர் பி.கருப்பண்ணன், செயலாளர் கே.வினோதினி,முதல்வர் டாக்டர் கே.ஹரிதேவன், உடற்கல்வி ஆசிரியர் பி.கதிரவன் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள்,மாணவ-மாணவிகள் வெகுவாக பாராட்டினர்.

    • மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது.
    • தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரியில் இ-குறுவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடந்தது. இதற்கு கலை கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பை தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி போட்டி தொடங்கியது.

    இந்த போட்டியில் 60 பள்ளிகள் கலந்து கொண்டன. முடிவில் மாணவர்களுக்கான போட்டியில் 156 புள்ளிகள் பெற்று நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தது. பெண்களுக்கான போட்டியில் நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்.

    தொடர்ந்து வெற்றி பெற்ற துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளி மாணவர்களை உடற்கல்வி இயக்குநர் சம்சுதீன், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்,சோலைமலை கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.பின்னர் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
    • ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    நாமக்கல்:

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு மற்றும் தடகள போட்டிகள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    அதில், கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஹாக்கி, நீச்சல், கையுந்து பந்து, மேசைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய, 5 பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும், மாவட்ட அளவில் 42 போட்டிகள், மண்டல அளவில் 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    பள்ளி மாணவி யருக்கான போட்டியில், மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல் நிலைப்பள்ளி மாணவியர் பங்கேற்றனர். அதில், பிளஸ்-2 மாணவி கீர்த்தனா, உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்றார். பிளஸ்-1 மாணவி ஸ்ரீசிவநிதி 800 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதலில் முதலிடம், 400 மீ. ஓட்டத்தில் 3-ம் இடம் பிடித்தார்.

    9-ஆம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறியும் போட்டியில் 2-ம் இடம் பெற்றார். மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டியில், பிளஸ் 2 மாணவி ஷோபனா பிரியா 100 மீ. ஓட்டத்தில் 2-ம் இடம் பிடித்தார்.

    வெற்றி பெற்ற மாணவியருக்கு, தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி. ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். அரசு ஊழியர்களுக்கான போட்டியில், இப்பள்ளி தமிழ் ஆசிரியர் வீரராகவன், நீளம் தாண்டுதலில் 2-ம் இடம், உடற்கல்வி ஆசிரியர் ஜீவா, கையுந்து பந்து குழு போட்டியில் முதலிடம் பெற்றனர்.

    இப்போட்டிகளில் வெற்றிபெற்ற, மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவியர், ஆசிரியருக்கு, ரூ. 19 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் முதலிடம் பெற்ற மாணவியர், சென்னையில் நடக்கும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்றவர்களை, பள்ளி தலைமையாசிரியர் சுடரொளி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • அபிநயா பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.
    • மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து அபிநயாவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் கழுநீர்குளம் பஞ்சாயத்து கல்லூத்து கிராமத்தை சேர்ந்தவர் அபிநயா. இவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். மாணவி அபிநயா சிறு வயது முதலே தடகளப் போட்டிகளில் ஆர்வம் உடையவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 50-க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

    இந்நிலையில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற 18 வயதுக்கு குறைந்த வீரர்,வீராங்கனைகளுக்கு இடையே நடைபெற்ற 100 மீட்டர் தூரத்தை 11.84 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். 1000 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் பங்குபெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தையும் வென்றது. இரு பதக்கங்களுடன் சொந்த ஊரான கல்லூத்து கிராமத்திற்கு திரும்பிய அபிநயாவிற்கு உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் மேளதாளம் முழங்க பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வரும் காலங்களில் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கான தங்கப்பதக்கம் பெற்று வருவது தன்னுடைய லட்சியம் எனவும் தெரிவித்தார்.

    மேலும் அவருக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் மற்றும் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க செயலாளர் நாராயண சிங்கம், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க செயலாளர் விஜய்சிங்ராஜ், தென்காசி மாவட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் சங்க தலைவர் அன்பழகன், மாவட்ட கவுன்சிலர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் குமார் பாண்டியன், தொழிலதிபர் எஸ்.கே.டி.பி.செந்தில், பிச்சையா மற்றும் பலர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

    • கலெக்டர் பதக்கங்களை வழங்கினார்
    • 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து 21-வது தேசிய அளவிலான இளையோர் தடகளப்போட்டியை திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடத்தியது. இந்த போட்டி கடந்த 28-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

    இதில் 28 மாநிலங்களில் இருந்து 950-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பகல், இரவாக நடைபெற இப்போட்டியில் 100 மீட்டர், 500 மீட்டர், 1500 மீட்டர் உள்ளிட்ட ஓட்ட பந்தையங்கள், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம், உயரம் தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் என்பன உள்ளிட்ட 40 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.

    போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தடகள சங்க துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமை தாங்கி பேசினார்.

    மாநில தடகள சங்க செயலாளர் லதா முன்னிலை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு நேற்று நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்க செயலாளர் புகழேந்தி, அருணை கன்ஸ்ட்ரக்ஷன் வெங்கட், பிரியா விஜயரங்கன், சேஷாத்திரி உள்பட நடுவர்கள், வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இந்த தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் 4 பேர் புதிய சாதனை படைத்து உள்ளனர்.

    ஆண்கள் பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தடை தாண்டும் போட்டியில் உத்தரபிரதேஷத்தை சேர்ந்த ஷாருக்கான என்பவர் 9 நிமிடம் 5 விநாடியில் தடைகளை தாண்டியுள்ளார்.

    அதேபோல் ஆண்கள் பிரிவில் கோல் ஊன்றி தாண்டுதல் போட்டியில் மத்தியபிரதேசத்தை சேர்ந்த தேவ்மீனா என்பவர் 5 மீட்டர் தாண்டினார்.

    பெண்கள் பிரிவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த புஷர்கான்கவுரி என்பவர் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தை 9 நிமிடம் 35 விநாடியில் ஓடியும், மகராஷ்டிராவை சேர்ந்த அனுஷ்கா தாதர்கும்பா என்பவர் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 1 நிமிடத்தில் ஓடியும் புதிய சாதனையை படைத்து உள்ளனர்.

    • 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
    • 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.

    ஊட்டி,

    குன்னூர் டேன் டீ பகுதியை சார்ந்த தேயிலை தோட்டத் தொழிலாளர் உதயகுமார். இந்திய வனத்துறை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் அரியனா மாநிலம் சண்டிகர் பஞ்சுளா மாவட்டத்தில் நடைபெற்ற தடகள போட்டியில் பங்கேற்றார். இதில் அவர் 25 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

    மேலும் 5 ஆயிரம் மீட்டர் ஒட்டப்பந்தயத்திலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதேபோல் கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாஸ்டர் அத்லெட்டிக் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர், 15 ஆயிரம் மீட்டர் போட்டிகளிலும் பங்கேற்று தங்கபதக்கமும், சான்றிதழும் பெற்றார்.

    தடகள போட்டிகளில் தங்கம் வென்ற தடகள வீரர் உதயகுமார், நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் பா.மு. முபாரக்கை சந்தித்து, தான் வெற்றி பெற்ற தங்க பதக்கங்களையும், சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது குன்னூர் நகரக் செயலாளர் ராமசாமி, மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, ரஹீம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×